Friday, 29 April 2011

மட்டன் சால்னா..!


தேவையானவை:
  1. ஆட்டுக்கறி..எலும்புடன்..............1 /4 கிலோ 
  2. பெரிய வெங்காயம் ................. 3 
  3. சின்ன வெங்காயம்.......................5
  4. பச்சை மிளகாய் நீளமானது........8
  5. உருளைக் கிழங்கு..தேவையானால்....3
  6. தக்காளி...............................................3 
  7. மல்லி பொடி.......................................4 தேக்கரண்டி
  8. மஞ்சள் பொடி...................................கொஞ்சம் 
  9. முந்திரி................................................6
  10. சோம்பு.................................................1 /2 தேக்கரண்டி
  11. கசகசா...................................................1 தேக்கரண்டி 
  12. இஞ்சி.....................................................1 இன்ச் நீளம்
  13. பூண்டு....................................................10 பல்
  14. தேங்காய் பால்.....................................1 மூடியில் எடுத்தது / ஒரு டம்ளர்
  15. ஏலம்........................................................1
  16. பட்டை...................................................சிறு துண்டு 
  17. கிராம்பு...................................................3 
  18. புதினா...................................................கைப்பிடி 
  19. கறிவேப்பிலை.மல்லி தழை..............கொஞ்சம் 
  20. எலுமிச்சை.......................................1/2 மூடி 
  21. எண்ணெய்.............................................3 தேக்கரண்டி
  22. உப்பு ....................................................... தேவையான அளவு


செய்முறை:

  • கறியை சின்னதாக நறுக்கி, கொஞ்சம் உப்பு மஞ்சள் பொடி போட்டு, கறி முழுகும் வரை கழுநீர்/நீர்  விட்டு,அதிலேயே முழு உருளைக் கிழங்கை கழுவி போட்டு,  குக்கரில் 4 விசில் விட்டு, நன்றாக வேகவிடவும்..
  • கிழங்கு வெந்தபின் அதனை தோல் உரித்துவிட்டு, கொஞ்சம் பெரிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பெல்லாரியை மெலிதாக நறுக்கவும்.  4 பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
  • தக்காளியையும் 8 ஆக நறுக்கவும். 
  • தேங்காயை துருவி 3 முறை பால் எடுக்கவும். 
  • இஞ்சி, பூண்டை நன்றாக அரைக்கவும்
  • 4 பச்சை மிளகாய், முந்திரி, கசகசா, சோம்பு இவற்றை நைசாக அரைத்த  பின், அத்துடன் மல்லி பொடியையும் வைத்து அரைத்துவிடவும். 
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சூடானவுடன், அதில் ஏலக்காயை உரித்துப் போட்டு, அத்துடன் பட்டை கிராம்பு போடவும். 
  •  பட்டை, கிராம்பு சிவந்தவுடன், அதில் அதில் அரைத்த இஞ்சி,பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.
  • பின்,  நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.  
  • அதிலேயே  அரைத்த பச்சை மிளகாய்,முந்திரி விழுதை போட்டு வதக்கிய பின், மூன்றாவது தேங்காய்ப் பாலை ஊற்றவும்.போதுமான உப்பு போடவும். மஞ்சள் பொடி போடவும்.
  • குழம்பில் வேகவைத்த கறி, நறுக்கிய உருளைக் கிழங்கைப் போடவும்.குழம்பு நன்கு கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றவும். 
  • குழம்பு நன்றாக சுண்டியதும், மூன்றாவது பாலை ஊற்றி, புதினா,மல்லி  போட்டு, அடுப்பை சிம்மில் வைக்கவும். குழம்பு நுரைத்துக் கொண்டு, கொதி வரத் தொடங்கியதும் இறக்கிவைத்து,1/2 மூடி எலுமிச்சை பிழிந்து விடவும். 

No comments:

Post a Comment